வரலாற்றுக்கு முந்திய காலங்களிலிருந்து சமகாலம் வரையிலும் இந்தியாவில் இயற்றப்பட்ட சமயம் சார்ந்த, சமயச் சார்பற்ற ஏராளமான இந்திய இலக்கியங்களில், 700 கவிதைப் பாக்களால் ஆன பகவத்கீதை போன்று மிகப் பெரிய அளவில் வேறு நூல்கள் புகழ் பெற்றதில்லை. கிறித்துவுக்குப் பிந்தைய தொடக்க நூற்றாண்டுகளில் கீதை இன்று இருக்கும் படிவத்தில் இறுதி வடிவம் பெற்றது. அவ்வாறு இறுதி வடிவம் பெற்ற சிறிது காலத்திற்குள்ளாகவே கிருஷ்ணனுக்கும் அருச்சுனனுக்கும் இடையே நடந்த உரையாடலில் பொதிந்திருந்த வாழ்க்கைத் தத்துவம், சமூகச் சீரழிவுக்கு உள்ளாகியிருந்த இந்துக்களை வெகுவாகக் கவர்ந்தது. அறிவுஜீவிகள் மட்டும் படிக்கும் நூலாகத் திகழ்ந்த கீதை காலப்போக்கில் இந்து மதத்தினர் பெரிய அளவில் புனிதமாகப் போற்றும் நூலாகத் தகுதி பெற்றது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | India Varalaattril Bhagavad Githai, Premnath Bazaz |
---|---|
எழுத்தாளர் | பிரேம்நாத் பசாஸ் |
பதிப்பாளர் | விடியல் |
பக்கங்கள் | 950 |
பதிப்பு | ஐந்தாவது பதிப்பு - 2019 |
அட்டை | காகித அட்டை |