Skip to product information
1 of 2

பூம்புகார் பதிப்பகம்

கலிங்கராணி

கலிங்கராணி

Regular price Rs. 60.00
Regular price Sale price Rs. 60.00
Sale Sold out
Shipping calculated at checkout.
அமுதூறும் அழகு தமிழில் சுவையூறும் சொல்லு திர்த்து அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் புகழ்க் கோபுரமாய் நிற்பவர் பேரறிஞர் அண்ணா . இந்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் புரட்சி கண்ட அவர், இலக்கிய உலகிற்கும் படைத்தளித்த செல்வங்கள் பல உள். புதினம், சிறுகதை, நாடகம், மடல், கட்டுரை, இதழுரை என்ற வடிவங்களில் எண்ணிக்கையில் இரண்டாயிரத்தைத் தாண்டி நிற்கின்றன; எண்ணத்தால் எக்காலத்தையும் தாண்டி நிற்கின்றன அவரது படைப்புகள். அவற்றுள் ஒன்றே குலோத்துங்கச் சோழனின் கலிங்கப் போரினைப் பின் னணியாகக் கொண்டு புதின வடிவில் பிறந்த கலிங்கராணி. பிறந்தோர் எல்லாம் பெயரோடு வாழ்வதில்லை; வாழ்ந்தாலும் மடிந்தபின் மற்றோர் நினைப்ப வாழ்ந்த தில்லை. இலக்கியங்களுக்கும் இந்நியதி பொருந்தும். புற்றீசலாய்ப் புதினங்கள் தோன்றிய நாளில், அண்ணாவின் புதினப் படைப்புகள் இருள் மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒளி வீசிய இளஞ் ஞாயிற்றுக் கதிர்கள். அண்டம் உள் ள ள வும் ஆதவன் உலவுவது போல, அவரது படைப்புகள் இளைய தலைமுறைகளின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றியும், அவ்வெதிர் காலத்திற்கு இடையூராய் அமைகின்ற நிகழ்காலத்தைப் பற்றியும், இந்நிகழ்காலச் சீரழிவுக்கு அடிகோலிய இறந்த காலத்தைப் பற்றியும் இயம்பிய வண்ணம் இருப்பன.
View full details