வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி. கி.மு 6000ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி. 1942ல் முடிகிறது. இந்தோ-அய்ரோப்பிய இனக்குழு (ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி அடைவதும், கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின் நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும், முகலாய ஆட்சியின் காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த ரீதியாகவே கதையாக எழுதியுள்ளார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு
தலைப்பு | Volgavilirunthu Gangai Varai, Rahul Sankrityayan |
---|---|
எழுத்தாளர் | ராகுல் சாங்கிருத்தியாயன் |
பதிப்பாளர் | Bharathi Puthagalayam |
பக்கங்கள் | 448 |
பதிப்பு | ஒன்பதாவது பதிப்பு - 2021 |
அட்டை | உறையிடப்பட்ட தடிமனான அட்டை |