Skip to product information
1 of 1

பூம்புகார் பதிப்பகம்

இரும்பு முள்வேலி (வரலாறு)

இரும்பு முள்வேலி (வரலாறு)

Regular price Rs. 40.00
Regular price Sale price Rs. 40.00
Sale Sold out
Shipping calculated at checkout.

அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறையமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப். புதுப்பொழுது மலரச் செய்யும் வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும், எழுத்துக்கு ஒரு நடை மேடைப் பேச்சுக்கு ஒரு நடை உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.

தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது; கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். ‘மனிதத்தன்மை’யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மைமிக்க கருத்தோவியம்.

 

View full details